Posts

Showing posts from August, 2011

எ-ஏ

Share எ-ஏ நாளொரு வீதியும் பொழுதொரு மார்க்கமும் புல்லுக்கும் பயனிலாக் கசக்கின்ற வாழ்க்கையும் பால்தேன் பருப்புமிவை கொண்ட நாளிலும் மனம் மட்டும் மங்கிக் கிடப்பதேனோ ! அப்போது சுகம்தரும் நீரான மதுவோ ? காலனைக் காணாது கொள்கின்ற மண்ணோ ? அங்கத்து மிளிர்தரும் உலோகப் பொன்னோ ? அங்கமே மிளிர்கின்ற பூலோகப் பெண்ணோ ? வாழ்வதன் விளைவென்ன துளிகூட காணேன் வாழ்வுதன் வழியென்ன, இம்மியும் அறியேன் வாழ்தலென்பது வெற்று காற்றுள்ள தேகமோ ? காற்றல்ல தேகத்தைச் சுற்றமும் போற்றுமோ ? கண்ணிலே காண்கின்ற இவைவெறும் காணலோ ? மண்ணிலே மாய்கின்ற காயமோர் நானலோ ? விண்ணிலே வாழ்கின்ற உயிரென்ப துள்ளதோ ? இவையெலாம் அறிந்தாலும் அழிவொன்றுமுள்ளதோ ! PS : Any one guess the meaning behind the title...? :)