Posts

Showing posts from August, 2013

ஆனந்த யாழை - ஆயிரம் ஆசைகள்

'தங்க மீன்கள்' படத்தின் 'ஆனந்த யாழை' பாட்டுடனே நான் கடந்த சில நாட்களாக வாழ்ந்துவருகிறேன். இது எவ்வளவு பிடித்துப்போனதென்றால், 'குரங்கு கையில் பூமாலை' என்பார்போல் என்னால் இதைக் கொல்லாமல் இருக்க, முயற்சித்தும் முடியவில்லை. 'கழுத கெட்டா குட்டிச்சுவரு'-ன்ற மாதிரி, ஒரு காதலன் தன் காதலியைப் பாடுவார்ப்போல் எழுத முயற்சித்துள்ளேன். முதலில் அசல். Disclaimer : The author does not take any responsibility in any way for any of the physical / mental imbalance caused by listening to this. ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின் ஆயுதத்தால் என்னை வாட்டுகிறாய் கண்களில் கள்ளத்தனம் காட்டுகிறாய் என் உள்ளத்தினுள் உயிர் ஊட்டுகிறாய் இரு நெஞ்சம் பிணைந்து வாழ்ந்திடும் வாழ்க்கைக்கு ஈடு இணை இங்கு ஏதுமில்லை. இந்த முள்ளில் உறங்கும் அகத்தின் அழகை நீயன்றி யாரும் காணவில்லை. அந்த விண்ணில் பறந்து வாழுகிறேன் என்னை நாடுகிறேன் உன்னைப் பார்த்தபடி என் நெஞ்சம் எடுத்து ஓடிவிட்டாய் அன்பில் மூடிவிட்டாய் கண்கள் தேடுதடி ஆயிரம் ஆசைகள் மூட்டுகிறாய் அன்பின் ஆயுதத்தால் என்னை வாட்